இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் இருவர் மீதும் கடுமையான தாக்குதல்!

Srilanka Police
Srilanka Police

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருதித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஒரு தரப்புடன் கதைக்க முற்பட்ட பொலிஸார் இருவர் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் பருதித்துறை, புனிதநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் நடைபெற்றுள்ளது.

இரண்டு தரப்பும் கொட்டன் தடிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் மோதல் நகர்ந்து பருத்தித்துறை நகர் வரையும் சென்றிருக்கின்றது.

அங்கு மோதலில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்து சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸார் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மற்றைய தரப்பினருக்குச் சாதகமாகக் கதைக்க முற்பட்டபோதே தாம் தாக்கியதாக தாக்குதல் நடத்திய தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தாக்குதலாளிகளைக் கைதுசெய்வதற்குப் பருத்தித்துறைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.