1,026 ஆக அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

666666666666666666666
666666666666666666666

திவுலபிட்டிய பகுதியில் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றிய நால்வருக்கே கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும் இதுவரையில் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட 1,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .