தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இணையவழி மூலமாக (Online ) மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்களில் இருந்து இணையவழி மூலமாக (Online) மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மருந்தகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் என்று .அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.