தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவகம் இன்று(2)மாலை காவல் துறையினால்முற்றுகையிடப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் எதனையும் நடத்தக்கூடாது என தலைமைஅலுவலகத்தில் இருந்த முன்னணியின் உறுப்பினர்கள் காவல்துறையினாரால் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நினைவுகூருவதற்கு யாராவது முற்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர்.
அதேவேளையில் முன்னணியின் அலுவலகத்தில் நின்ற செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை காவல்துறையினர் பெற்று சென்றுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.