வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருபவர்கள், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மாவட்ட செயலர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்று(05) இடம்பெற்ற கொரோனாத் தொற்று அவசர நிலை தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்பவர்களும் இதே நிலை காணப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.