கொரோனாவால் இளைஞர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

Tamil News 0408 2020 72490870952607
Tamil News 0408 2020 72490870952607

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்றும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் இறப்பையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.