அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்!

Missing 1 1
Missing 1 1

நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் என்றுதமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Missing 1
Missing 1


இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

Missing 4
Missing 4

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் பெற்ற உற்சாகமான வெற்றியை வாழ்த்துவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

Missing 2
Missing 2

வவுனியாவைச் சேர்ந்த தமிழ் தாய்மார்கள் நாங்கள். இலங்கை ஆட்சியின் கொடுமையால் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை தேடுகிறோம்.

Missing 3
Missing 3

நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் .
இறுதியாக அமெரிக்காவும் உலகின் பிற பகுதிகளும் உங்களை எங்கள் தலைவராகப் பெறுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள், உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு, ஆற்றொணா கவலையை போக்க உதவ கேட்கிறோம்.

Missing 5
Missing 5

கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க விரைவில் உங்கள் உதவியைக் கேட்போம்” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய அமெரிக்க அதிபரை வாழ்த்தும் முகமாக அவரது புகைப்படத்தை தாங்கிய பதாதையையும் மற்றும் அமெரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்தியவண்ணம் நின்றிருந்தார்கள்.