பஷில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக வருமாறு கோரிக்கை!

basil rajapaksa
basil rajapaksa

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் கையொப்பம் இட்டு பஷில் ராஜபக்க்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

கட்சிக்கு உயிர்கொடுத்து நிர்வகிப்பவர் நீங்களே. எனினும் இதுவரை கட்சியின் ஸ்தாபகர் நாடாளுமன்றத்தில் இல்லை. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டு நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டியது முக்கியமானது. எனவே கூடிய விரைவில் நாடாளுமன்றம் வருவீர்கள் என நம்புகின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.