புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கின் யாழ் மாவட்டத்தில் மகாஜன கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா (198), யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் (195), கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மதியழகன் மகிர்சன் (195), சென் ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவி அன்ஜிதன் அஜினி (195), அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி சிவநாதன் லிவின்சிகா (195) ஆகிய மாணவர்கள் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
மேலும் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலய மாணவி முரளிதரன் அஸ்விகன் (196), வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா (196), கிளிநொச்சியில் தர்மபுரம் இல.1 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரவீந்திரன் நிதுசன் (195), மன்னாரில் சென்.சேவியர் பெண்கள் கல்லூரி மாணவி ரவீந்திரன் றொசானா சைலின் (195) உள்ளிட்ட 9 மாணவர்களும் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக வடமாகாண கல்வி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.