இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண்
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண்
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண்
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண்