நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

Corona 1
Corona 1

நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் 391 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 04 பேர், கட்டார் – தோஹாவிலிருந்து 03 பேர், சீனாவிலிருந்து ஒருவர் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஒருவர் ஆகியோர் இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 171ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 479 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 456 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.