நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

அடைக்கலநாதன்
அடைக்கலநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிடக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்பது மணிக்கு ஆஜராகுமாறு நீதிமன்றப் பதிவாளரால் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளை இன்று மாலை மன்னாரில் உள்ள செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக, கோப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக இவ்வாறு கட்டளை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திப்பிரிவிடம்தெரிவித்துள்ளார்.