நாட்டில் கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

korona5 scaled 1
korona5 scaled 1

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 487 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து இன்று (புதன்கிழமை) வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 24 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான மேலும் 6 ஆயிரத்து 106 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.