நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 370 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.