கொரோனா அச்சம்: தென்னாபிரிக்கா – இங்கிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டது!

ENG vs RSA 1st ODI postponed
ENG vs RSA 1st ODI postponed

இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி!

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது.

இந்த போட்டி முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்தது.

எனினும் தென்னாபிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்றைய தினத்துக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரு அணி வீரர்களும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.