நான்கு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு, அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய சுற்றாடல் அமைச்சின் செயலாளராக வைத்தியர் அனில் ஜாசிங்க, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக வைத்தியர் பிரியத் பாண்டு விக்ரமா, உயர் கல்வி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கபிலா பெரேரா மற்றும் நீதி அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே.மாயதுன்னே ஆகியோரை நியமிக்க நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு, அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை கட்டாருக்கான இலங்கையின் புதிய தூதுவராக எம். மொஹமட்டையும் நியமிக்க நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.