யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

Corona Virus Medicine
Corona Virus Medicine

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வீடு திரும்பியிருந்த பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

அவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரின் உறவினர்கள் மூவருக்கே நேற்று (05) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.