கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்படுகின்றது களுவாஞ்சிக்குடி காவல் நிலையம்!

police station
police station

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும்காவல்துறை அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கள்ளாகியுள்ளார் என்று மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் லதாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த போதே இவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து களுவாஞ்சிக்குடி காவல்துறை நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் நாளை காவல்துறை நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் அம்பாறை – அக்கரைப்பற்றில் 13 பேருக்கும், அட்டாளச்சேனை மற்றும் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.என்பதும் குறிப்பிடத்தக்கது