யாழ்.மாவட்டத்தில் இன்று(06) இரவு 7 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 22620 குடும்பங்களை சேர்ந்த 74995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அனர்த்தங்கள் காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 358 குடும்பங்களை சேர்ந்த 1340 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 93 வீடுகள் முழுமையாகவும், 2969 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.