மேல் மாகாணத்தில் மேலும் சில பகுதிகள் நாளை முடக்கப்படுகின்றன!

020f5bbd curfew
020f5bbd curfew

மேல் மாகாணத்தில் மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன.

கொம்பனித்தெரு காவல்துறை பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட காவல்துறைப்பிரிவின் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் வத்தளைகாவல்துறை பிரிவின் கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த, குருந்துஹேன, அவரிவத்த,வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மேலும், பேலியகொட காவல்துறை பிரிவின் பேலியகொடவத்த, கஹபட, மீகாஹவத்த,பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கிரிபத்கொட காவல்துறை பிரிவின்வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .