சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாந்தை மேற்கில் கால்நடைகள் உயிரிழப்பு!

ghijhih
ghijhih

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமடு குளப் பகுதியில் மேச்சலுக்கு சென்ற அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் அதிகளவான கால்நடைகள் காணாமல்போயுள்ளன

கால்நடைகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன் சில கால்நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, பெரிய மடுப் பகுதியில் காணாமல் போன கால்நடைகளை மீட்கும் பணிகள் கடற்படை, இரணுவம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நேற்று மாலை இடம் பெற்றன.

இதன்போது அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஏனைய காணாமல் போன மாடுகளை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்கள் ஈடுபட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.