லங்கா பிரீமியர் லீக் 10க்கு 10 போட்டித் தொடர் அடுத்த ஆண்டு ஆரம்பம் !

Sri Lanka Cricket Logo CI 1
Sri Lanka Cricket Logo CI 1

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதனால், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தேசிய ரி -10 லீக்கை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி இத் தொடரை பெப்ரவரி 1-12 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

தொடரில் பங்கேற்கும் அணிகளின் உரிமைகள் தொடர்பான டெண்டர்களுக்கு எஸ்.எல்.சி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது. 

போட்டியின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெப்ரவரில் தொடரை நடத்த முடியும் என்று இலங்கை கிரக்கெட் நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.