பேருந்து சேவைகளில் மாற்றம் : இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

1596760399 Dilum L
1596760399 Dilum L

பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களை மையப்படுத்தி ஒரே தடவையில் இரண்டு பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

இதன்படி, பயணிகளின் நெரிசலை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டமானது நாளை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேருந்துகளில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை அழைத்து செல்கின்றமை தொடர்பில், தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை அழைத்து செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைது செய்யுமாறு, தாம் காவல்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, தாம் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்