மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பிய 96 இலங்கையர்கள்

625air

இரு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 96 இலங்கையர்கள் இன்று காலை இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரின் டோஹாவிலிருந்து 48 இலங்கையர்களும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 48 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

இதேவேளை 114 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காக இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுமுள்ளனர்.

அதன்படி 72 பேர் கட்டாரின், டோஹா நோக்கியும், 28 பேர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கும், 14 பேர் சிங்கப்பூருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.