சிறைக்கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை

images 1 1
images 1 1

சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைகளில் தற்போது நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்வருடம் முடிவதற்குள் குறைந்தது கைதிகளின் எண்ணிக்கையை 8 ஆயிரத்தால் குறைக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்று தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதுமுள்ள 28 சிறைச்சாலைகளில் 28,915 கைதிகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.