கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

corona virus sri lanka copy copy
corona virus sri lanka copy copy

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 344 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 877ஆக காணப்படுகின்றது.

இதில் 6 ஆயிரத்து 933 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 461 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.