மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

mahara 01
mahara 01

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் கைதிகள் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஏனைய நால்வரின் சடலங்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி 25 பேர் அடங்கிய குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த குழுவினர் விசாரணைகளின் நிமித்தம் இன்று மஹர சிறைச்சாலைக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்த மஹர சிறைச்சாலைக் கைதிகள் 11 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.