கம்பஹாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தலில்

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொது சுகாதார பயிற்சி பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், பயிற்சி பொது சுகாதார பரிசோதகர்கள 50 பேர், கடமைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்த அவர்களில் ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்களில் வெயாங்கொடை பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் 28 பேர் பயிற்சி நிலையங்களிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.