லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று இரு போட்டிகள்!

Lanka Premier League 2020
Lanka Premier League 2020

முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில்ஆரம்பமான தொடரின் 14 ஆவது போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.

கொழும்பு கிங்ஸ் அணியானது தான் எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது.

அதேநேரம் காலி அணியானது தான் எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டும் உள்ளது.

இதேவேளை இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தொடரின் 15 ஆவது போட்டியில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகளும் மோதவுள்ளன.

யாழ்ப்பாணம் அணியானது தான் எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.

அதேபோன்று தம்புள்ளை அணியும் தான் எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றியை பெற்று அரையிறுதி வாய்ப்பினை உறுதிபடுத்தியுள்ளது.

இந் நிலையில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளில் எது நான்காவது அணியாக அரையிறுதிக்கு நுழையும் என்பது கேள்விக் குறியாகவுள்ளது.