கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!

vlcsnap 2020 12 08 07h45m37s243
vlcsnap 2020 12 08 07h45m37s243

தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், போன்ற காரணங்களால் நெடுந்தீவு கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.

கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு ஜே /1 தொடக்கம் ஜே/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின் படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை,களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.

நெடுந்தீவு ஜே/ 1 தொடக்கம் ஜே/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி தெரிவித்தார்.