தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், போன்ற காரணங்களால் நெடுந்தீவு கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.
கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு ஜே /1 தொடக்கம் ஜே/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின் படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை,களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.
நெடுந்தீவு ஜே/ 1 தொடக்கம் ஜே/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி தெரிவித்தார்.