கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் சீரற்ற காலநிலையால் வாழைத்தோட்டங்கள் பாதிப்பு

unnamed 4
unnamed 4

புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன.

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரவி புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடும் மழை மற்றும் புயல் காரணமாக குலைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.