வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தில் சர்வதேச சிறுமியர் தின நிகழ்வுகள் இன்று(08) மாலை இடம்பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வவுனியா அலுவலகத்தின் ஏற்பாட்டில் “பாரபட்சமற்ற சமத்துவ உலகை கட்டியெழுப்புவோம்”எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன கலந்து கொண்டார்.
நிகழ்வில் அருளகத்தை சேர்ந்த சிறுமியர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் நந்தசீலன், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயகனடி, அருளகத்தின் முக்கியஸ்தர் ஆ.நவரத்தினராசா, சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.