வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (08) மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரஞ்சனி (வயது 41) என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மேலும் அவரது மரணம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.