வவுனியாவில் நாளை முதல் ஏற்பட போகும் மின் தடை தொடர்பிலான விசேட அறிவித்தல்!

ceb
ceb

எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் , ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 10ம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும், 14ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராமம் , அரசடிக்குளம் பகுதியிலும்,15ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராமம் , அரசடிக்குளம் பகுதியிலும்,16ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆவது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும்,

17ம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்,18ம் திகதி வன்னி இராணுவபடை முகாம் , வன்னி விமானப்படை முகாம் , விமானப்படை றேடார் பகுதியிலும்,19ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடைக்கான தேவையான முன் ஆயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.