இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Rainning
Rainning

இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இடியுடன் கூடிய மழை வீழ்ச்சியின் போது காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடுமெனவும் மின்னல் தாக்கங்களின் போது ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.