மேலும் 119 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

download 2 3
download 2 3

மத்திய கிழக்கின் மூன்று நாடுகளிலிருந்து மேலும் 119 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து 40 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 29 பேரும், ஓமானின் மஸ்கட்டிலிருந்து 50 பேரும் இவ்வாறு இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.