கொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

water cut
water cut

கொழும்பை அண்டிய சில பிரதேசங்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன் படி இன்று காலை முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

இதேவேளைக் கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளுக்கு குறைவான அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.