மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காவல்துறை அதிகாரி கொலை!

nellai murder
nellai murder

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலமுனை பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

காணிப்பிரச்சினை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவதம் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது