பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

body 960x640 1
body 960x640 1

பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் இன்று (10) சடலமாக காணப்பட்டுள்ளார்.

கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது.

குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.