களுத்துறை தொழிலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

MzU5MzU4NQ
MzU5MzU4NQ

களுத்துறை தொழிலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவர் குறித்த பகுதியில் முதலாவது கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 18 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

களுத்துறை தொழிலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தொழில் நிமித்தம் வெலிகமவில் இருந்து களுத்துறை நகருக்கு ருஹூணு குமாரி தொடரூந்தின் ஊடாக தினந்தோறும் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 27 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த தொடருந்தின் 2 ஆம் வகுப்பில் பயணித்தோர் தங்களது விபரங்களை அறிவிக்குமாறு வெலிகம நகர சபை பொது சுகாதார பரிசோதகர் நுவன் குமார கோரிக்கை விடுத்துள்ளார்.