கொரோனா தொற்றுக்கு இலக்காகிய ஒன்பது மாத குழந்தை!

171202 genomic sequencingweb
171202 genomic sequencingweb

அக்கரைப்பற்றில் ஒன்பது மாதக்குழந்தையொன்று கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளது. அத்துடன் கல்முனைப்பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இந்த 9 மாதக்குழந்தையும் 75 வயது வயோதிபரும் நேற்று இனங்காணப்பட்டிருந்தனர். 9 மாதக் குழந்தையை சிகிச்சைக்காக கொழும்பு ஜடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் குழந்தையின் பெற்றோர்களுக்கு தொற்றில்லையென தெரிவிக்கப்படுகிறது.