சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

2781e554d425f7da18b6cc53117d1379 XL
2781e554d425f7da18b6cc53117d1379 XL

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது – சிறைகளில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகள் குறித்து ஆராய்ந்து அவ்வகையான வசதிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.