கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 07 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானம்!

Coronavirus person
Coronavirus person

கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதியின் படி நாளொன்றுக்கு 03 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 07 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.