கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

water cut
water cut

கொழும்பின் பல பகுதிகளுக்கு 6 மணித்தியால நீர்விநியோகத்தடை இன்று (வெள்ளிக்கிழமை) அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இன்று இரவு 10 மணிமுதல் கொழும்பு நகரின் டீன்ஸ் வீதி, டார்லி வீதி மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட இருக்கின்றது.

அதேபோன்று வோக்‌ஷோல் வீதி மற்றும் இப்பன்வல சந்தி முதல் கொம்பெனித்தெரு வரையிலான பகுதிகளில் குறைந்த அழுத்த நீர்விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.