எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என்ற மமதையில் காவற்துறையினர் செயற்படுவதாக சிவாஜிலிங்கம் கண்டனம் !

sivaji 1

எந்த வித விசாரணைகளும் இடம் பெறாது என்ற மமதையில் பாதுகாப்பு தரப்பினர், காவற்தறையினர் வடக்கில் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய நேற்று  வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவரை வீதியில் சுட்டு போடுவோம் என ஒரு காவற்துறை உத்தியோகத்தர் மிரட்டியுள்ளார் என தெரிவித்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் , மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.