நாவலப்பிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா!

1605370702 COVID positive 2
1605370702 COVID positive 2

நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டிய பொது சுகாதார பரிசோதகர், எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

அத்துடன், மாணவனின் குடும்ப உறவினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவனின் தந்தைக்கு, முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாகவும், நாவலப்பிட்டிய பொது சுகாதார பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.