கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை

baby
baby

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதுடைய பெண் ஒருவருக்கு ஆரோக்கியமான நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததன் காரணமாக அப்பெண்ணுக்கு (சிசேரியன்) சத்திர சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 170 இற்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.