முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை குறித்த சுகாதார வழிமுறைகளை மீறிய ஆயிரத்து 256 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.