கம்பளை, நாவலப்பிட்டி, கலஹா, புசல்லாவை, தொலுவ, ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த பிரதேசங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாவலப்பிட்டி நகர பாடசாலைகள், கம்பளை நகர பாடசாலைகள், தொழுவ மற்றும் புசல்லாவை ஆகிய பிரதேசங்களின் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுவ, கலஹா, உடப்பலாத்த, கங்க இயலகோரல, மற்றும் கங்க வட்ட கோரல உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வரை 63 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.