வடமாகாணத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று!

unnamed 6
unnamed 6

வடக்கு மாகாணத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் நாளை சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

உடுவில் பிரதேச சபை குறுக்கு வீதியில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத்தலைவருக்கேகொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே இன்று கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா சாலம்பை குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவருடைய 5 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து கடந்த வாரம் வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். சுயதனிமைப்படுத்தப்பட்டு 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.